Description
மோகமுள் ‘ யமுனா வாழ்ந்த வீடு’ ஒருபோதும் இந்த பூமியில் இருந்ததில்லை. அவை நம் கனவுகளின் நீர்பரப்பின் ஆழத்தில் அசைந்துகொண்டிருக்கின்றன. யமுனாக்கள் உருவாக்கும் நீர் வளையங்களை இடையறாது எழுதிச் செல்லும் மனுஷ்ய புத்திரன் ‘இரண்டு நிமிடம் உன்னை நினைத்துக்கொள்ளலாமா?’ என அனுமதி கேட்கிறார். ஒரு மலரை ஒவ்வொரு இதழாகச் செதுக்குவதுபோல ஒவ்வொரு உணர்வையும் செதுக்கும் அவர் தன்னையே ஒரு ரோஜாவாக மாற்றும்படி கேட்கிறார்.
‘மழையே மழையே மழை எனும் அன்பே’ என மனுஷ்ய புத்திரனைத்தவிர யாரால் ஆராதிக்க முடியும்?








Reviews
There are no reviews yet.