Description
கதைகளுக்கென்று தனியாக மனிதர்களைத் தவிர எந்த உந்துதலும் இல்லை. வாழ்வு தரும் நெருக்கடியில் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக அலைக்கழிப்புக்கும்
தவிப்பிற்கும் உள்ளாகிறது.
அதில் மனம் தப்பிப் போகிறவர்கள் வெறுமனே பரிதாபத்திற்கு உரியவர்கள் மட்டுமல்ல அபாக்கியசாலிகள் அவர்களுடைய பாரங்களை சுமக்க நாதியற்றவர்கள்.
அப்படி நாதியற்று போனவர்கள் தங்களை நிகழ்காலத்திற்குள்ளாக பொருத்திக் கொள்ள எத்தனை அவதியுறுகிறார்கள் என்பதை அவர்களின் சமகால சிக்கல்களை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளவையேஇத்தொகுப்பில் உள்ள கதைகள்.
இறுகி மூச்சையடைக்கும் சமகால சிக்கல்கள் தொடரும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் ? என்பதை இக்கதைகளைப் படிக்கும் போது ஒருவித மன அதிர்ச்சியோடு ஒருவர் கண்டுகொள்ள முடியும்.








Reviews
There are no reviews yet.