Description
புத்தகங்களின் உலகம் மர்மமானது. நூலகங்களில் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஏராளமான மர்மக்குரல்கள் கேட்டவண்ணம் இருக்கின்றன. அப்படி துயருற்ற ஆவிகளின் நடமாட்டம் நிறைந்த புத்தகங்களில் ஒன்றுதான் மனுஷ்ய புத்திரனின் இந்தத் தொகுப்பு.
வாழ்வின் மீதான மிருதுவான ஸ்பரிசங்களை ஒரு கையால் எழுதிக்கொண்டே மறுகையால் ஒரு நடிகனை காணச்சென்று மரித்தவர்களின் விநோத உலகம், டிட்வா புயல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித்தின் மரணம், தங்கவிலை ஒரு பவுன் ஒரு லட்சத்தை தொட்டது என தமிழ் கவிதையில் எவரும் தொடாத தன் காலத்தின் பிரச்சினைகளை கனலும் சொற்களால் எழுதுகிறார்.
இத்தொகுப்பு டிசம்பரின் பனியாலும் மழையாலும் காதலாலும் தளும்பிக்கொண்டிருக்கிறது.








Reviews
There are no reviews yet.