Description
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாவல்.
ஒரு மழைநாளில் எப்போதும்போல்தான் விடிகிறது மீனாவின் அந்த நாள். ஆனால் அவளைப்பின் தொடர்ந்து வந்த ஒரு மனிதனால் அவளது வாழ்வின் மொத்த வரைபடமும் மாறிவிடுகிறது. அந்த நாளில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் அவளை மர்மான ஒரு இருள்வட்டப் பாதையில் செலுத்துகின்றன.
நம் காலத்தில் ஆண்-பெண் உறவுகளில் நிகழும் ஏமாற்றங்களும் ஏமாற்றுதல்களும் ஒருவரைப்பற்றி இன்னொருவர் அறியமுடியாத மர்மவெளிகளை உருவாக்கியிருக்கின்றன. அந்த மர்மத்தில் துரோகம் ஒர் இயல்பான நிலையாகிவிடுகிறது.
ஒரே நேரத்தில் பல்வேறு உறவுகளுக்குள் இருக்கும் மனிதர்கள், எவரும் எந்த உறவுக்கும் விசுவாசமாக இருக்கத் தேவையில்லாத இருபத்தோறாம் நூற்றாண்டின் மன நிலைகள், அன்பிற்கு இருக்கும் குற்றத் தன்மை இவையெல்லாம்தான் இந்த நாவலின் அடித்தளமாக இருக்கின்றன.
மிக விறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் வாசகர்களுக்கு மிகுந்த வாசிப்பின்பத்தை வழங்குகிறது.








Reviews
There are no reviews yet.