Description
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக தன் நகைச்சுவையால் தமிழ்ச்சமூகத்தை தட்டியெழுப்பியவர். தமிழ்ச்சினிமாவில் என் எஸ் கிருஷ்ணனும் எம் ஆர் ராதாவும் வரும்வரை அசட்டு செயல்பாடுகளே அங்கதம் என்ற நிலையே இருந்தது. இருவரும் சமூக மாற்றத்திற்கான முற்போக்கு கருத்துக்களை தங்களது அற்புதமான கலையாற்றலால் மக்களிடம் கொண்டுசென்றனர். திராவிட இயக்கம் உருவாக்கிய மகத்தான கலைஞர் என் எஸ் கிருஷ்ணன். நாடகங்கள், திரைப்படங்கள், வில்லுப்பாட்டு என பற்பல கலை வடிவங்களில் தனது ஆளுமையை ஒளிரச்செய்த என் எஸ் கே இந்தியாவின் சார்லி சாப்ளின் என அழைக்கப்பட்டதில் மிகை ஒன்றும் இல்லை.
என் எஸ் கிருஷ்ணனின் கலையையும் வாழ்வையும் இன்றைய தலைமுறையினருக்கு விரிவாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.








Reviews
There are no reviews yet.