Description
சார்லி சாப்ளின் திரைமொழியின் இலக்கணம். சினிமாவின் அழகியலையும் அரசியலையும் தன் கலையின் வழியே கற்பித்த மாபெரும் கலைஞன். சினிமா பேசத்தொடங்கிய பிறகும்கூட சினிமாவின் மொழி காட்சிவழி அனுபவமே என மௌனப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். வாழ்வின் அபத்த நாடகங்களை அங்கதத்தின் உச்சத்தில் நின்று நகையாடிய உன்னத கலைஞன். சாப்ளினின் பிற்காலப் படங்கள் பேசத்தொடங்கியபோதும் அவை வாழ்வின் அவலங்களுக்கு எதிராகவும் அதிகாரத்தின் குரூரங்களுக்கு எதிராகவும் தனது திரைமொழியினை கூர்மையாக வெளிப்படுத்தின.
இளம் தலைமுறையினருக்கு சாப்ளினின் மகத்தான வாழ்வையும் கலையையும் இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.








Reviews
There are no reviews yet.