Description
லண்டன்காரர் இன்றைய உலகமயமாக்கல் சூழலை, இங்கிலாந்து நாட்டு அரசியல் சூழலை, சமூகச்சூழலை, வாழ்க்கைச் சூழலை மட்டும் பேசவில்லை. அகதிகளின் வாழ்வைச் சொல்வதின் மூலம் உலக அரசியல் சூழலையும் பேசுகிறது. சாந்தெலா சோசலிஸ்ட் கட்சியில் சேர்வதுகூட உலகமயமாக்கலின் ஒரு முகம்தான்.
சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் சமூகத்தின் வாழ்க்கையை எழுதவில்லை. இங்கிலாந்து சமூக வாழ்க்கையை எழுதுவதின் வழியே உலக சமூக வாழ்க்கையை, உலகமயமாக்கல் வாழ்க்கையை பண்பாட்டை, கலாச்சாரத்தை எழுதியிருக்கிறது. நாவலில் ஏக்கம். தன்னிரக்கம், கவலை, கண்ணீர் எதுவுமே இல்லை. கிண்டல் இருக்கிறது. விமர்சனம் இருக்கிறது. இதுதான் நாவலின் பலம்.








Reviews
There are no reviews yet.